நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் இன்று (ஆக. 26) ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளத்தில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள 57 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.அதேபோல, முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு சார்பில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.அவர் தனது கடிதத்தில், “திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 பேர் உள்பட இந்தியப் பயணிகள் அனைவரையும் மீட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும், “சாலைகள், பாலங்கள் சேதமடைந்து, தகவல் தொடர்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்களைக் கண்டறிந்து மீட்கவும், அவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரவும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியத் தூதரகம் மற்றும் மீட்புக் குழுவினரை நான் வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.M.K. Stalin has urged the Union and State governments to act swiftly to rescue Indians stranded in the severe floods in Nepal.நேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்