அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் ஆண்டு வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.மேலும் எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனக் குறிப்பட்ட அவர் இத்திட்டத்தினால் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர் என்று கூறினார். 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் நிதி நெருக்கடியான சூழலில் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தவெக வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகை முதல் முதற்கட்டமாக 3 சிலிண்டர்கள் அதுவும் ரூ.2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருபபது குறிப்பிடத்தக்கது்.Chief Minister Vijay has announced that as the first phase of the Annapoorani Super Six scheme, 3 free cylinders per year will be provided.பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!