உன்னிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்... இருமுடி குழந்தை நட்சத்திரத்தைப் பாராட்டிய தனுஷ்!

Wait 5 sec.

இருமுடி கட்டு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான இருமுடி கட்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வன்முறையான வாழ்க்கை வாழ்ந்த, குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மற்றும் அவரது மகளைச் சுற்றி இப்படத்தை கதை எழுதப்பட்டிருக்கிறது. மகளின் விருப்பத்திற்காக அவர் ஐயப்ப தீட்சை மேற்கொள்வதும், அதன் மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கொண்ட உணர்வுப்பூர்வமான இக்கதையில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முக்கியமாக, இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜாவுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான நடிகை நக்‌ஷத்ராவுக்கு அதிக பாராடுகள் கிடைத்தன. A cloud-nine moment for our little star ❤️The extraordinary @dhanushkraja Garu praised #Nakshatra for her performance and showered #Irumudi with appreciation ❤️‍Book Your Tickets Now! ️https://t.co/LPeVCIRYVl#IRUMUDI / #IRUMUDIKATTU pic.twitter.com/oJbwLVl3N0— Mythri Movie Makers (@MythriOfficial) August 25, 2026 இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் சிவா நிர்வாணாவுக்கு விடியோ கால் மூலம் அழைத்து தன் வாழ்த்துகளைக் கூறியதுடன், சிறுமி நக்‌ஷத்ராவிடம், “உன்னை நேரில் சந்திக்கும் போது, உன்னிடமிருந்து நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் பிரமாதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறாய். அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள் கண்ணா” எனப் பாராட்டியுள்ளார். இதனைக் கேட்ட நக்‌ஷத்ரா நன்றி சொல்லும் நெகிழ்ச்சியான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விடாமல் உற்சாகக் குரல் கொடுத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ருக்மணி வசந்த்!Actor Dhanush has praised the child star who acted in the movie Irumudi Kattu.