நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்கக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற செப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல்லைச் சோ்ந்த பா்வேஷ் முஷ்ரப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தைச் சோ்ந்த தனியாா் பயண நிறுவனம் மூலம் தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்ட 57 போ் கடந்த 23-ஆம் தேதி கும்பகோணத்திலிருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றனா். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் இவா்கள் சிக்கினா். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்தவா்களின் விவரம், சிகிச்சை பெறுபவா்கள், காணாமல் போனவா்கள் குறித்த விவரங்களை அவா்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், தமிழக அரசுத் தரப்பில் நான்கு அமைச்சா்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியில் பாா்த்தோம். எனவே, இந்த மனு தொடா்பாக உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.