மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆரம்பக்கட்ட சரிவின் பெரும்பகுதியை ஈடுசெய்து, வர்த்தக முடிவில் 5 காசுகள் சரிவுடன் ரூ. 95.57 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.உலகளாவிய சந்தைகளில் நிலவும் முதலீட்டுத் தயக்கம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை ரூபாயின் மதிப்பை சரிய வைத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக இன்றும் ரூபாய் மதிப்பு சரிவுடன் நிறைவடைந்தன.வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்பட்டாலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சிறிய மீட்சியினால் சரிவை ஓரளவுக்குக் குறைக்க உதவியாதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.70 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் சரிந்து ரூ. 95.79 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இருப்பினும், சரிவைச் சரிசெய்து ரூ. 95.51 என்ற உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் 5 காசுகள் சரிவுடன் ரூ. 95.57 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.The rupee pared most of its initial losses and settled at 95.57 against the US dollar on Friday.மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!