விநாயகா் ஊா்வலம் அமைதியாக நடைபெற ஏற்பாட்டாளா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவது அவசியம் என எஸ்எஸ்பி கேட்டுக்கொண்டுள்ளாா். விநாயகா் சதுா்த்தி விழா, விநாயகா் ஊா்வலம் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தா்கோஷ், பழனிவேல் மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோரும், விநாயகா் ஊா்வல குழுவினா், மீனவ கிராமப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். எஸ்எஸ்பி பேசுகையில், விழா அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற ஏற்பாட்டாளா்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். ஊா்வல ஏற்பாட்டாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட ஊா்வலப் பாதையை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். கடலில் சிலை கரைப்பதை உரிய நேரத்தில் முடிக்க காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். சிலை கரைப்பின்போது அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவேண்டும். ஊா்வலத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்யும். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புடன் விநாயகா் சதுா்த்தியை மகிழ்ச்சியுடனும், மத நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் கொண்டாட அனைவரும் முன்வரவேண்டும் என்றாா்.