திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெயக்குமார், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த பெருந்துறை தொகுதியில் அதிமுக ஜெயக்குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தி விசாரணைக்கு வருகிறது. அதுபோல முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை கோரிய வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நேற்று தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. What are the Cases hearing today in Madras HC