கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் இதற்கான பதிலை அளிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் சொந்த தேவைகளே இந்தியாவுடன் அதனை நெருங்கி வரச் செய்கிறதா?