ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கர்க் தீவு மற்றும் ஜாஸ்க் அருகே ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்த ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாக புதன்கிழமை ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் போர்க்கப்பலை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படைகள் ஈரானின் ஐந்து எண்ணெய் ககப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது; அதற்குப் பதிலடியாகவே தெஹ்ரானின் இந்த குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும் அமெரிக்காவும் ஈரானும் ஒருவித முட்டுக்கட்டையான சூழலில் உள்ளன; உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான மிக முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அதேவேளையில் அமெரிக்கா ஈரானின் துறைமுகங்கள் மற்றும் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.தனது எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் அருகே உள்ள எண்ணெய் கப்பல்களைத் தாக்கும் என்று அந்த இஸ்லாமியக் குடியரசு அறிவித்த சில நிமிடங்களிலேயே, ஈரானின் ராணுவத்தின் மிக வலிமையான பிரிவான புரட்சிகர பாதுகாப்பு படை, ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் மூலம் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகள், நிலைகள் நிலைநிறுத்தப்பட்ட இடங்கள் மற்றும் போர் விமானங்களுக்கான இடங்கள் ஆகியவை சேதமடைந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜோர்டானை நோக்கி ஏவப்பட்ட ஈரானின் 18 ஏவுகணைகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் ராணுவம் கூறியுள்ளது. குவைத் மற்றும் பஹ்ரைன் அருகே உள்ள எண்ணெய் கப்பல்களின் பணியாளர்கள் தங்கள் கப்பல்களை விட்டு வெளியேறுமாறு தெஹ்ரான் வலியுறுத்திய பின்னரே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன; கப்பல்கள் "தாக்குதலுக்கு உள்ளாகும்" என்று புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரித்திருந்ததாக ஈரான் அறிக்கை வெளியிட்டிருந்தது. அமெரிக்கா ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்களை அழித்ததைத் தொடர்ந்தே இந்தச் சமீபத்திய பதற்றம் உருவானது; கப்பல்களைத் தாக்குவதற்கு முன்பு பணியாளர்களைக் கப்பலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியிருந்தது. ஈரான் தொடர்ந்து அமெரிக்க கடற்படைக் கப்பல்களைத் தாக்க முயற்சித்து வருகிறது, அவர்கள் அவ்வாறு செய்யும் அல்லது செய்ய முயற்சிக்கும் ஒவ்வொரு முறைக்கும், அவர்கள் எண்ணெய்க் கப்பல்களை இழக்க நேரிடும், அதையே நீங்கள் இன்றும் மீண்டும் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கொலம்பியாவிற்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.கார்க் தீவின் கடற்கரைக்கு அப்பால் ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க ஏவுகணை தாக்கியதாகவும், இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டன.ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டால், அந்த பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளை இஸ்லாமியக் குடியரசு தாக்கும் என்று ஈரான் ராணுவத் தலைமைத் தளபதி அலி அப்துல்லாஹி எச்சரித்திருந்தார்.எண்ணெய் விலை உயர்வு கச்சா எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகத்தை போர் சம்பவங்கள் மேலும் தடைசெய்யலாம் என்ற அச்சுறுத்தலால், புதன்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு சுமார் 100 டாலராக உயர்ந்துள்ளது.சர்வதேச ஒப்பந்தத்தின் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 99.38 டாலராக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் முக்கிய அமெரிக்க ஒப்பந்தமான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஒரு பீப்பாய்க்கு 94.51 டாலராக உள்ளது. பிப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுசெல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் பெருமளவில் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், அந்த நீர்வழிப்பாதையின் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கிவிட்டது.ஹோர்முஸ் நீரிணையில் மிகவும் நவீனமான, ஆளில்லா அமெரிக்க நீர்மூழ்கி டிரோன்களில் ஒன்றைக் கைப்பற்றியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.அந்த டிரோன் செயலிழந்துவிட்டது என்றும், அது எந்தவொரு முக்கியத் தரவுகளையும் கொண்டிராத "பழைய மாடல்" என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு தெரிவித்தது.இந்த அறிக்கை குறித்து அமெரிக்க ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. Iran's Revolutionary Guards said Wednesday they pummelled a US military base in Jordan, ரஷியா-உக்ரைன் மீண்டும் மோதல்