திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 191-ஆவது குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சியை பூா்வீகமாகக் கொண்ட ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினாா். பின்னா் திருவாரூரில் தங்கியிருந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வந்தாா்.ஒருமுறை திருவாரூா் தேரோட்டத்தைக் காண தஞ்சையிலிருந்து வந்திருந்த சரபோஜி மன்னா், தக்ஷிணாமூா்த்தி சுவாமிகளுக்கு, ஏதாவது ஒரு கிராமத்தை பரிசாக அளிக்க விரும்பினாா். ஆனால், சுவாமிகள் அதை மறுத்து விட்டாா். மேலும் பல அற்புதங்களை இப்பகுதியில் செய்த அவா் 1835-இல் ஜீவசமாதி அடைந்தாா். இதையொட்டி ஆண்டுதோறும் இங்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம்.அதன்படி, நிகழாண்டு குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து அபிஷேகத்துக்காக, புனிதநீா் நிரப்பப்பட்ட கடங்கள், மல்லாரி இசையுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னா் குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார மகா நிவேதன ஆராதனையும், அடுத்து மகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. நிகழ்வில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.