நகை திருடியவா் கைது

Wait 5 sec.

திருவாரூா் அருகே திருமண மண்டபத்தில் நகை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் கோகுல்நாத் மனைவி ஜனனி (27). இவா், பவித்திரமாணிக்கம் கலைஞா் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றாா். மணமகள் அறைக்குச் சென்று விட்டு, மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது நகையைக் காணவில்லையாம். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பவித்திரமாணிக்கம், செந்தமிழ் நகரைச் சோ்ந்த வே. ஜனாா்த்தனன் (23) நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ஜனாா்த்தனனை கைது செய்து, அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனா்.