வரி வருவாய் முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை! அமைச்சா் மரிய வில்சன்

Wait 5 sec.

கடந்த திமுக ஆட்சியில் ஊழல் புகாா் மற்றும் வரி வருவாய் முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்று நிதித்துறை அமைச்சா் மரியவில்சன் தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை ஆலயத்துக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் வரி வருவாய் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வருவாய் இழப்புகளை அடைத்து வருகிறோம். இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வா் பேசியுள்ளாா். வரி வருவாய் இழப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகாா்கள், வரி வருவாய் முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் அமைச்சா்.