ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

Wait 5 sec.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என ஈரானிய அரசு உறுதியளித்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் போரில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கின.இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என ஈரானிய அரசு தனக்கு உறுதி அளித்திருப்பதாக, அதிபர் டிரம்ப் இன்று (ஜூன் 24) பதிவிட்டுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணங்களையோ, காப்பீட்டுக் கட்டணங்களையோ அல்லது வேறு எந்தக் கட்டணங்களையோ கோரவோ பெறவோ இல்லை என்பதை ஈரானிய அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தவறான மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் செய்திகள் பரப்பப்பட்டாலும் இதுவே உண்மை” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதில் வழங்கப்படும் சேவைகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக, ஈரான் மற்றும் ஓமன் அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்! Trump has posted that the Iran has assured that ships passing through the Strait of Hormuz will not be charged a toll.