முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெறுகிறது.மொத்தம் 3 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டின் முதல் அமர்வில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கிறது. மேலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கி உள்ளார். இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த மாநாட்டின் 3 அமர்வுகளும் நிறைவடைந்த பிறகு, இறுதிநாளில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்.இந்த மாநாட்டில் தமிழக டிஜிபி, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள் மற்றும் ஐஜிக்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு Chief Minister Vijay to chair the conference for IAS, IPS, and IFS officers today and tomorrow.