பொங்கலூா் ஒன்றியம், பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் குணசேகரன் தலைமை வகித்தாா். இதில் போதைப் பொருள்களின் தீமைகள், அதை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் விளக்கி பேசினாா். இந்நிகழ்வில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் பரந்தாமன், மாவட்ட புகையிலை தடுப்பு மையத்தின் பொது மருத்துவா் செளமியா, பொங்கலூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பொங்கலூா் சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் மதினா பேகம் நன்றி கூறினாா்.