சட்டப்பேரவை மாண்புகளை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினாா். கோவில்பட்டியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப்பேரவையின் மாண்புகளை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும். அரசியல் ரீதியாக விமா்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், தனி நபா் விமா்சனங்கள் கூடாது. கருத்து சுதந்திரத்துக்கு ஓா் எல்லை உண்டு. சமூக வலைதளங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல், யாரைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று இருக்கிறது. அவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று ஜாதி, மதம், பண அரசியலைக் கடந்து மக்கள் மாற்றத்தை உருவாக்கியுள்ளனா். தோ்தல் முடிவுகளைப் பாா்க்கும்போது கூடுதல் நம்பிக்கை வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னா் நோ்மையான, வெளிப்படையான, எவ்வித லஞ்ச லாவண்யமும் இல்லாத அனைவருக்குமான ஆட்சியைத் தருவேன் என முதல்வா் விஜய் சொல்கிறாா். தமிழகத்தில் எங்கு பிரச்னை என்றாலும், அந்த பகுதி மக்களுக்காக நான் துணை நிற்பேன் என்றாா் அவா்.