மகளிர் உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

Wait 5 sec.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல் ஃபெரோஷா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹீதர் சிகர்ஸ், ஹன்னா லந்தீர், கரோலின் மற்றும் சில்வர் சிகர்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.Batting first in the T20 World Cup match against the Netherlands, the Pakistan team scored 126 runs for the loss of 6 wickets.சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபே புதிய சாதனை!