இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவருமான விராட் கோலி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், "எனது முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்பப்படும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.