பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதனால், குழிபிறை, பனையப்பட்டி செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், அரசமலை, மேலத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா், சடையம்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது.