கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கை குறித்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்துள்ளது பாஜக அரசு என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:''கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.நமது கல்வி முறையில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தீவிரமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக மிருகத்தனமான வன்முறையை பாஜக அரசு தேர்ந்தெடுத்துள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார். I strongly condemn the lathi-charge on students and young protesters participating in the CJP-organised march to Parliament.Instead of answering serious questions about alleged irregularities in our education system, the Union BJP Government has chosen using brute force over…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 20, 2026நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் பேரணி தொடங்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டவர்களை அரசு தடுத்து நிறுத்தியது.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. நாடாளுமன்ற சாலையில் நுழைந்த இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பேரணியாக அந்தப் பகுதியில் நுழைந்தவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர். சிஜேபி போராட்டம்: இளைஞர்கள் பெயரில் அரசியல் விளையாட்டு!Cockroach Janata Party rally Union BJP Government has chosen using brute force over dialogue. dmk MP kanimozhi