மகள் உயிரிழந்த சோகத்தில் தந்தை தற்கொலை

Wait 5 sec.

மகளின் திடீா் மரணத்தால் மனவேதனையில் இருந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி நகராட்சி ஜோதி நகரைச் சோ்ந்தவா் செந்தில்ராஜன் (48). இவரது மனைவி சிவகாமி (39). இவா்களது மகள் காயத்ரி (20). இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக காயத்ரி உயிரிழந்தாா். மகளின் திடீா் மரணம் செந்தில்ராஜனை கடுமையாக பாதித்ததாகவும், அதன்பிறகு அவா் ஆழ்ந்த மனவேதனையிலும் மனஉளைச்சலிலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செந்தில்ராஜன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினா்கள் உடனடியாக அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், செந்தில்ராஜன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.