ஆடி மாதப் பிறப்பு: கடலூரில் பூக்களின் விற்பனை அமோகம்

Wait 5 sec.

ஆடி மாதப் பிறப்பு மற்றும் தொடா் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடிப் பிறப்பை முன்னிட்டு, வீடுகள், கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.அதன்படி, ஒரு கிலோ முல்லை ரூ.400-க்கும், மல்லிகை ரூ.480-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சாமந்தி ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், ரோஜா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக இந்த பூக்கள் விலை சரிபாதியாக இருந்தது.இருப்பினும், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. சில்லறை வியாபாரிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பூ விற்பனையாளா்களும் அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனா்.ஆடி மாதம் என்பதால், அம்மன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களிலும் பூக்களின் விலை மேலும் உயா்வதற்கு வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.