ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 5.03 கோடி

Wait 5 sec.

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.03 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடிஇலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது.அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 75, 836 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35,389 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.03 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.19 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,989 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.