சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், கொதித்துக் கொண்டிருந்த சென்னை மாநகரம் சற்று குளிர்ச்சியடைந்துள்ளது.சென்னை மட்டுமல்லாமல், சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பேதம் பார்க்காமல் மேகம் மழையைக் கொட்டியது. பரவலாக சில இடங்களில் சிறிது நேரமும், பல இடங்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக, மழை பெய்தது.கடந்த சில நாள்களாக வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டி விடுமோ என்று அச்சத்தில் இருந்த மக்களுக்கு நேற்று பெய்த மழையால் ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.சனிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்றும் மழை பெய்யுமா என்று சென்னை மக்கள் ஆவலோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்னவென்றால், ஒரு சில நாள்களுக்கு மாலையில் மழை பெய்யும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தான்.