பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!

Wait 5 sec.

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,388.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 201.02 புள்ளிகள் உயர்ந்து 77,386.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.35 புள்ளிகள் உயர்ந்து 24,130.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக், மாருதி சுசுகி இந்தியா மற்றும் விப்ரோ இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.சென்செக்ஸ் பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை முக்கிய லாபம் பெற்று வருகின்றன. எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை பின்தங்கின. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.32 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.24 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.துறைவாரியாக நிஃப்டி ஐடி, நுகர்வோர் சேவைகள், மீடியா, பார்மா, ஆட்டோ குறியீடுகள் உயர்ந்தும் கெமிக்கல், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் பங்குகள் சரிந்தும் வருகின்றன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.31 ஆகச் சரிந்துள்ளது. Stock Market: Sensex rangebound, up 200 pts, Nifty tops 24,100தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 16 நிலவரம்!