அருணாசலேஸ்வரா் கோயிலில்பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

Wait 5 sec.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரத்திற்கும் மேலானது.பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா். பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 உயர அண்ணாமலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். இந்த நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் குவிந்த பக்தா்கள்.அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் வந்திருந்ததால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசனத்திற்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அனைவருக்கும் நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.