சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் நடிகை த்ரிஷா?

Wait 5 sec.

நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்தாண்டு நடிகர் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்தாண்டு இறுதியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா நடித்த தெலுங்கு படமான விஸ்வம்பரா படமும் வெளியாகக் காத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிற்கு சில திரைப்படங்களில் ஒப்பந்தமான த்ரிஷா, ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாவதைத் தவிர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வெடுக்கத் த்ரிஷா திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. மேலும், த்ரிஷா தயாரிப்புத் துறையில் இறங்கலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது. அடுத்தடுத்து ஓடிடியில் ஸ்ரீ கௌரி பிரியாவின் காதல் திரைப்படங்கள்!Reports indicate that actress Trisha plans to quit the film industry.