பாஜகவிடம் கொத்தடிமைகளாக திமுகவினர் சரண்: நிர்மல் குமார்

Wait 5 sec.

பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி அமைத்து, அடிமைகளாகி விட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுக முன்னதாக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்தனர். தற்போது நேரடியாகவே கூட்டணியில் உள்ளனர். திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அமைச்சராகலாம் என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இதிலேயே தெரிந்துவிட்டது. அவர்களுக்குள் எல்லா பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துவிட்டது. இதனிடையே, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு கூறுகிறார். இதையே பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கூறினார்.அப்படியெனில், திமுகவும் பாஜகவும் மீண்டும் 2001 காலகட்டத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த திமுக, அவர்களின் குடும்பத்தை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்று மீண்டும் பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்கப் போகின்றனர்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்த்து வாக்களிப்போம் என்று இதுவரையில் ஒரு வார்த்தைகூட திமுக தரப்பிலிருந்து வரவில்லை. தீர்மானத்துக்கு ஆதரவளித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா வந்தால் எதிர்த்து வாக்களிப்போம் என்று அவர்கள் இதுவரையில் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.தமிழகத்தின் நலனை எப்படி அடமானம் வைத்தார்களோ, அதுபோல் அவர்களும் தில்லியில் அடிமைகளாக சரணடைந்து விட்டனர்" என்று தெரிவித்தார்.சென்னையில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா?DMK has surrendered to the BJP in Delhi like slaves, says Minister Nirmal Kumar