ஆன்லைன் லாட்டரி விற்பனை! மன்னார்குடியில் 10 பேர் கைது!

Wait 5 sec.

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை ஈடுபட்டபோது தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு புதூர் பகுதியைச் சேர்ந்த பி. முருகேசன் (42), மன்னார்குடி மேலவாசல் க. பரமசிவம் ( 54 ), மன்னார்குடி அ. கதிரவன் ( 41) கா. சத்தியமூர்த்தி (36), எம். கார்த்திகேயன்(45 ), நெடுவாக்கோட்டை ஏ. அருளானந்தம் (43), மன்னார்குடி ஐயப்பன் (30), சசி ஜெஸ்டின்(30), டி. அன்புக்கரசு (54), வி. சுரேஷ் (38) உள்ளிட்ட 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 10 நபர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினி, ஒரு ஐபோன் ,12 ஆண்ட்ராய்டு செல்போன் ,4 ஆட்டோ, 4 இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், லாட்டரி விற்பனையை தடுக்கத் தவறியதாகக் கூறி மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜ்கமலை மாவட்ட எஸ்பி என். சதிஷ் குமார் பரிந்துரையின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார். Online lottery sales: 10 arrested in Mannargudi