எஃப்எம்எஸ்சிஐ ஜேகே டயா் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி முதல் சுற்று வரும் செப். 11 இல் கோவை கரிமேடு பந்தய மைதானத்தில் தொடங்குகிறது.இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீ நாத் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி இலச்சினையை வெளியிட்டாா்.எஃப்ஐஏ உலக மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கவுன்சில் உறுப்பினா் அக்பா் இப்ராஹிம், இந்திய மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு தலைவா் அரிந்தம் கோஷ், சென்னை டா்போ ரைடா்ஸ் இயக்குநா் ஸ்வேதா சுந்தீப், சீனிவாசு ஆலப்பன் பங்கேற்றனா்.செப். 11-13, அக். 23-25-இல் கோவை கரிமேடு பந்தய மைதானம், நவ. 13-15-இல் பெங்களூரு பிரென் பந்தய மைதானம், டிச. 11-13-இல் சென்னை இருங்காட்டுக்கோட்டை காா் பந்தய மைதானத்திலும் நடைபெறவுள்ளது.