ஹிமாசலில் நாளை(ஆக.17) அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், பள்ளி, உட்பிரிவு, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றதைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வெள்ளிக்கிழமை அளித்த அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுதந்திர நாளைக் கொண்டாடிய தனியார் பள்ளிகள், ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுமுறை அளிப்பதா வேண்டாமா என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. It will be a holiday on Monday in all government schools in Himachal Pradesh as students and teachers were required to attend school on Independence Day celebrations. சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!