தொடர் சரிவுக்குப் பிறகு நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று (ஆக. 22) சரிந்து மீண்டு வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,701.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 37.24 புள்ளிகள் உயர்ந்து 77,574.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.75 புள்ளிகள் உயர்ந்து 24,239.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக், மாருதி சுசுகி இந்தியா மற்றும் விப்ரோ இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.சென்செக்ஸ் பங்குகளில், எட்டர்னல், பெல், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, எம்&எம், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின்றன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.08 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.9 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ, எப்எம்சிஜி பங்குகள் சரிந்துள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்துள்ளன. Stock Market: Sensex, Nifty moves in small rangeபேரவையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம்..! உதயநிதி பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்புபேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதி