கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் (ஆக. 17) திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு சுமாா் 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், திங்கள்கிழமை (ஆக.17)முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.மேலும், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.