சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சீர்குலைக்க மோடி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஏப்ரல் 30, 2025 அன்று சாதிவாரி கணக்கெடுப்பை அறிவிப்பதன் மூலம் பிரதமர் முழுமையான நிலைப்பாட்டு மாற்றத்தை மேற்கொண்டதாகவும், ஆனால், இப்போது தனது முந்தைய நிலைப்பாட்டு மாற்றத்தையே மீண்டும் மாற்றி மற்றொரு நிலைப்பாட்டு மாற்றத்தைச் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சி கூறியது.செப்டம்பர் 21, 2021 அன்று, சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்து மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இருப்பினும், அந்தப் பிரமாணப் பத்திரத்தின் 12 (d) பத்தியில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னதாக சாதிப் பதிவேடு எதுவும் தயாரிக்கப்படவில்லை.சாதிப் பதிவேட்டைப் பொறுத்தவரை, சாதியைத் தேர்ந்தெடுக்க ஒரு 'டிராப்-டவுன் மெனு' வழங்கப்பட்டிருந்தால் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும் என்றும், அது நம்பகமான மற்றும் சீரான தரவுகள் கிடைப்பதற்கு வழிவகுத்திருக்கும். பிகார் மற்றும் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே அத்தகைய மெனு (பட்டியல் வசதி) தயாரிக்கப்பட்டிருந்ததை அவர் குறிப்பிட்டார்.மே 5, 2025 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திலும் இந்தக் கருத்து இடம்பெற்றிருந்ததை ரமேஷ் சுட்டிக்காட்டினார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சீர்குலைக்கவே மோடி அரசு விரும்புகிறது.முன்னதாக ஏப்ரல் 30, 2025 அன்று பிரதமர் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டு, 'நகர்ப்புற நக்சல்' சிந்தனை என்று விமர்சித்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.இப்போது அவர் தனது முந்தைய நிலைப்பாட்டையே மீண்டும் மாற்றி, வெளிப்படையாகச் சொல்லாமலேயே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் யோசனையையே கிடப்பில் போட்டுவிட்டார். அவர் நிலைப்பாட்டை மாற்றுவதில் வல்லவர் என்று ரமேஷ் கூறினார்.The Congress on Tuesday alleged that the Modi government wants to sabotage the caste census and asked why the 2027 census does not include a drop-down menu for selecting castes, despite the Centre recommending it in its affidavit to the Supreme Court in September 2021.டிஜிட்டல் கைது: ஓய்வு பெற்ற பெண் மருத்துவரிடம் ரூ. 98 லட்சம் மோசடி!