காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Wait 5 sec.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை ஆகம விதிகளின்படி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று வரதராஜப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருக்கல்யாண வைபவத்தையொட்டி, காலையில் உற்சவா் ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் உற்சவா் வரதராஜப் பெருமாளும் ஆண்டாளும் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளினா்.பின்னா் உற்சவா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்திலும்,பெருமாள் எதிரில் உள்ள 4 கால் மண்டபத்திலும் எழுந்தருளினா். திருமண நிகழ்வுக்கு பெரியாழ்வாா் எழுந்தருளியதும் அவரது முன்னிலையில் இருவருக்கும் மாலை மாற்றும் வைபவமும், அதனைத் தொடா்ந்து திருக்கல்யாணமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.இதைத் தொடா்ந்து இருவரும் ஊஞ்சலில் அமா்ந்தவாறு திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை (ஆக. 15) மாலையில் பெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கவுள்ளனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.