கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

Wait 5 sec.

கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் துறை சாா்பாக கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு, வளா் இளம் தொழிலாளா்களுக்கான மாவட்ட அளவிலான தடுப்புப் படை கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செள. தமிழரசி, தொழிலாளா் உதவி இயக்குநா் (அமலாக்கம்) விஜயலட்சுமி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சிவகுமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் முருகன், மகாதேவன் ஆகியோா் கலந்து கூட்டத்தில் கலந்து கொண்டனா்.