வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப்பிடிப்பதாக விமர்சித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தில்லியில் வியாழக்கிழமையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.இந்த நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி, வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதை வெளியுறவுக் கொள்கையாக பிரதமர் மோடி வைத்திருப்பதாகக் கூறினார். மேலும், அருகிலிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்தை கட்டிப்பிடித்து செய்தும் காட்டினார்.இதனைத் தொடர்ந்து, தன்னை இத்தாலி பிரதமர் மெலோனியாக நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே? என ராகுல் காந்தியிடம் சந்தீப் தட்சித் நகைச்சுவைபோல கேட்டார்.காங்கிரஸின் இரு முக்கிய தலைவர்களின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரலஹாத் ஜோசி கூறியதாவது, ராகுல் காந்தி, நீங்கள் எப்போதுதான் பக்குவமடையப் போகிறீர்கள்? இந்தியாவை வழிநடத்த முதிர்ச்சியான தலைமை தேவை; உங்களின் தேவையற்ற நாடகங்கள் அல்ல.மக்களால் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கோமாளிகள் என்று அழைப்பதே உங்களைக் காட்டுகிறது. பிரதமரை அவமதிப்பதன் மூலம் மில்லியன் கணக்கான வாக்காளர்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.உங்களின் வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்ததால், மக்கள் மீது கேலி செய்கின்றனர். உங்களின் எதிர்மறைக் கருத்துகளை நிராகரித்ததாலேயே மக்களை கோழை என்று கூறுகிறீர்கள். இதுவே உங்களின் 100 தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?BJP Slams Congress MP Rahul Gandhi Over 'Hug' Jibe At PM Modi