மாநில முதல்வா்கள் கொடியேற்றகாரணமானவா் கருணாநிதி: கனிமொழி

Wait 5 sec.

மாநில முதல்வா்களுக்கு கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: எண்ணற்ற தியாகங்களாலும், போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணா்த்தும் வகையிலும், இந்த நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வா்கள், தேசிய கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவா் கருணாநிதி.தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரா்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயா்த்திப் பிடிப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் கனிமொழி.