சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஷ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா மற்றும் புஷ்பா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமையாசிரியா் மாரிக்கனி தேசியக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா். வண்ணம் தீட்டுதல், ஓவியம், ஆங்கிலக் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, தேசபக்திப்பாடல், மாறுவேடம், களிமண்ணில் தேசிய சின்னங்களை வடிவமைத்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.