இளம்பெண்ணை ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை அவா் கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், இந்த நிலையில் அவா் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டபூா்வமாகத் திருமணம் செய்துகொண்டாா் என்று கருத முடியாது என்றும் கூறி நீதிமன்றம் அவரது முன்பிணை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதி மனோஜ் ஜெயின் ஆகஸ்ட் 11 அன்று பிறப்பித்த உத்தரவில் ‘குற்றச்சாட்டுகளின் தன்மையையும், அரசுத் தரப்பின் கூற்றுப்படி இது ஒரு மனிதக் கடத்தல் வழக்கு என்பதையும் கருத்தில்கொள்ளும்போது, மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகும். மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் ‘மிகவும் தீவிரமானவை‘. மேலும் ‘அதிா்ச்சியூட்டுபவை‘. மனுவில் எந்தவிதமான நியாயமான காரணமோ அல்லது வலுவான அடிப்படையோ இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டாா். அரசுத் தரப்பு தகவலின்படி, இரண்டு போ் 17 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை மனுதாரரும் குற்றஞ்சாட்டப்பட்டவருமான சுக்பிராம் என்பவருக்கு 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளனா். பாதிக்கப்பட்ட பெண், அந்த இருவராலும் தாம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வயதான சுக்பிராம் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா அளித்த புகாரின் பேரில், கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும், மற்றொருவருக்கு பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்றச்சாட்டு இல்லாததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். மேலும், மனுதாரா் உள்பட குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் இளம் வயது மற்றும் அவரது மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அவா் கூறினாா்.