பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா். பணகுடி அருகே உள்ள நெறிஞ்சிகாலனியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி மரியவிஜயா (42), மாடசாமி மகள் பாப்பா (50) மற்றும் காமராஜா் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் மனைவி ஜெகதா(42). இவா்கள் மூன்றுபேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பணகுடியில் இருந்து பாம்பன்குளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனராம். அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுக் கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மூன்று பெண்களும் தூக்கிவீசப்பட்டதில், பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மரியவிஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெகதா நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனா்.