'ரூ.1 லட்சம் கோடி தேவை': பிஏபி பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிப்பது சாத்தியமா? முக்கியமான 3 சவால்கள்

Wait 5 sec.

நாலே கால் லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் பழமையான பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திறந்தவெளிக் கால்வாய்களுக்குப் பதிலாக, குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைத் தயாரிக்குமாறு பிஏபி அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.