இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த ஏன் வரவில்லை? கண்கலங்கிய ஊர்வசி!

Wait 5 sec.

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து நடிகை ஊர்வசி பேசியுள்ளார். இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்தது.தொடர்ந்து, திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஆனால், முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகை ஊர்வசியை அறிமுகப்படுத்தியவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏன் ஊர்வசி வரவில்லை என்கிற கேள்விகளும் இருந்தன. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஊர்வசியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஊர்வசி, “நான் அங்கு வந்தால் என்ன உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் எனத் தெரியும். அவரை அப்படி படுக்கையில் பார்க்க என்னால் முடியாது. என் எமோஷனலை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. அவரின் மிகச்சிறந்த மாணவி நான். என் கேலி, கிண்டல்களைத்தான் விரும்புவார். நான் அழுவது அவருக்குப் பிடிக்காது. அவர் எங்கும் போகவில்லை. என் மனதில் கோட் சூட் போட்டபடி அழகாக இருக்கிறார். அது போதும்” என்றார். ராகவா லாரன்ஸின் 30-வது திரைப்படம்! சாய் அபயங்கர் இசை!Actress Urvashi has spoken about not paying her last respects to the late director Bhagyaraj.