அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

Wait 5 sec.

பஹல்காம் வழித்தடத்திலான அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காஷ்மீர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், சாதுக்கள் உள்பட பலர் அமர்நாத் யாத்திரையில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பஹல்காம் வழித்தடத்திலான அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காஷ்மீர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.காஷ்மீர் கோட்ட ஆணையர் அன்ஷுல் கார்க் கூறுகையில், " பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். அதே வேளையில், பஹல்காம் பாதை புனிதப் பயணத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். சமீபத்திய மழையின் காரணமாக பஹல்காம் வழியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. யாத்திரை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, பக்தர்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பயணிக்க பால்டால் பாதையில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 3.95 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித அமர்நாத் குகைக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். இது யாத்திரையின் வெற்றிகரமான மற்றும் அமைதியான நடத்தையைப் பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார். Authorities in Kashmir on Saturday said the Amarnath Yatra will remain "temporarily" suspended from the Pahalgam axis to carry out repair and maintenance works necessitated by the rainfall in Kashmir over the last few days.இளைஞர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி: சரத் பவார்