போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

Wait 5 sec.

கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க 135 கி. மீ. விழிப்புணா்வு நடைப்பயணத்தை மேற்கொண்டனா். வீ த லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பரசு, அமைப்பினருடன் போதையில்லா தமிழகத்தை உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணமாக பேரையூரில், இருந்து முதுகுளத்தூா், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேசுவரம் அடைந்து பேக்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் வரை 135 கி.மீ. தூரம் செல்வதற்கு பயணத்தை தொடங்கினா்.27-ஆம் தேதி டாக்டா் அப்துல்கலாம் நினைவு தினத்தன்று அவரது மணிமண்டபத்தில் இந்த நடைபயணம் முடிவடைகிறது. மேலும் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சென்றனா்.