நீலகிரி: கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலூகா, ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து மலைத் தொடரை அலங்கரித்துள்ளன.ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொடர் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை, கனியம்வயல், தேவன் மற்றும் செலுக்காடி பகுதிகளில் தினமும் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.The forest department has advised the public not to visit Kurinji flowers in Kudalur.மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?