திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!

Wait 5 sec.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.நேற்று ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியைச் சோ்ந்த மணிக்குமாா் என்பவர் உள்ளே நுழையும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பின்னர் பலியானார். இந்த சம்பவம் மறைவதற்குள் இன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கோயிலில் சிக்கிக் கொண்டார். நீண்ட போராட்டத்திற்குப் பின் அப்பெண்ணை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இதனிடையே உடல் பருமனாக இருப்பவர்கள் இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குள் செல்லக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையாா் கோயில் அமைந்துள்ளது. அங்கு, குறுகலான பகுதி (இடுக்கு) வழியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வெளியே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.The incident of a devotee getting stuck in the Idukku Pillayar temple has occurred once again.சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு