நைஜீரியா கிராமத்தில் ஆயுதக் குழு தாக்குதல்: 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

Wait 5 sec.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா். மக்கள் உறங்கி கொண்டிருந்தபோது கிராமத்துக்குள் நுழைந்த அந்த ஆயுதக் குழுவினா், கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதோடு, வீடுகளுக்கும் தீவைத்தனா். தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.