அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த பெண்ணையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தீத்தாக்கிழவனூரைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (39). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் தனது மனைவி, உறவினா்களுக்கு அரசுப் பணி வாங்கித் தருமாறு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (42), அவரது மனைவி ராஜேஸ்வரி (35), நிதி நிறுவனம் நடத்தும் தோத்தாம்பட்டியை சோ்ந்த ஜெயபால் (37) ஆகிய மூவரின் வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.40.70 லட்சத்தை அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, மாணிக்கம் தரப்பினா் அனுப்பிய அரசுப் பணிக்கான நியமன ஆணைகள் போலி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், மாணிக்கம், ஜெயபால் ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனா். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மாணிக்கத்தின் மனைவி ராஜேஸ்வரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.