நீலகிரி கேரட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Wait 5 sec.

மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரியில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை கணிசமான அளவு விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் கேத்தி, பாலடா, முத்தோரை மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. இந்த கேரட்டுகள் மேட்டுப்பாளையம், உதகையில் உள்ள மண்டிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் சந்தைகளில் ஒரு கிலோ கேரட் தரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் போதிய லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையில் இருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரி கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.65 வரை விலை உயா்ந்து விற்பனையானது. வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வரும் நாள்களிலும் இதே விலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.